Sunday 19th of May 2024 11:24:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்: வெளியானது விசேட வர்த்தமானி!

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்: வெளியானது விசேட வர்த்தமானி!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேர்தல் ஆணையத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிலுவையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இடத்திற்கு நியமிக்க முடிவுசெய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார புதன்கிழமை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்தார்.

இதனை ஏற்று ரணிலை பாரளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானி இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

2020 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 249,435 வாக்குகளை பெற்ற நிலையில் அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. அந்த ஆசனம் இதுவரை வெற்றிடமாக இருந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE